ARTICLE AD BOX
உண்மை சம்பவ கதையில் திரிஷா
25 ஏப், 2022 - 16:48 IST
திரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ஒரு படத்தில் திரிஷா நடிக்கிறார். பல குறும்படங்கள், விளம்பர படங்கள் மற்றும் வெப்தொடர் எடுத்த அருண் வசீகரன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இழப்பதற்கு எதுவுமில்லாத ஒரு பெண் இரத்த பூமியில் மேற்கொள்ளும் ஆக்ரோஷமான பயணமே கதையின் கரு. 2000களில் மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது.
திரிஷா முதன்மை நாயகியாக நடிக்க, அவருடன் மியார் ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் நடிக்கிறார்கள். உண்மை சம்பவம் நிகழ்ந்த மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(ஏப்., 25) முதல் படப்பிடிப்பை துவக்கி உள்ளனர். தொடர்ச்சியாக 50 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- தமிழரசன்
- நடிகர் : விஜய் ஆண்டனி
- நடிகை : ரம்யா நம்பீசன்
- இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்